கிறிஸ்மஸ் தீவுகளில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறார்களும், இளவயதினரும் ஜெட் விமானங்கள் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனால் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
டார்வின் நகருக்கு இன்று ஒரு விமானம் பயணித்ததாகவும், நாளையும், எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் மேலும் இரண்டு விமானங்கள் பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிறிஸ்மஸ் தீவுகளில் சுமார் 200 புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய குடும்பங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தீவுகளின் தலைவர் கோர்டன் தொம்சன் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், 500 இளைஞர்கள் வேறெங்கும் அனுப்பிவைக்கப்படாது, கிறிஸ்மஸ் தீவுகளில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்மஸ் தீவுகளில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
December 16, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment