மன்னாரில் விளையாட்டு அரங்கு,ஆரம்ப பாடசாலை அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-Photos
மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்திற்கான விளையாட்டு அரங்கு மற்றும் ஜீவபுரம் ஆரம்ப பாடசாலை ஆகியவை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(10) புதன் கிழமை காலை இடம் பெற்றது.
கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதனத்திற்கான விளையாட்டு அரங்கு 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளது.அதே வேளை ஜீவபுரம் ஆரம்ப பாடசாலை 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளது.
-வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இதே வேளை மன்னார் நகர சபையின் செயலாளர் எஸ்.எல்.றொனால்ட்,மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்,கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் எம்.முஜாகித்,வடமாகாண ஆளுனரின் உதவி செயலாளர் எம்.ரம்சின் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
மன்னாரில் விளையாட்டு அரங்கு,ஆரம்ப பாடசாலை அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:
No comments:
Post a Comment