இலங்கை பிரஜைக்கு எதிராக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் வழக்கு
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயற்சித்ததாக இலங்கை ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அல்-குசேய்ஸ் என்ற வர்த்தக நிலையத்தில் சந்தேக நபர் சிறுமியை தேவையற்ற வகையில் தொட்டார் என அந்த சிறுமி தனது தந்தையிடம் முறையிட்டார்.
இதனையடுத்து பிள்ளையின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 31 வயதான இலங்கை பிரஜைக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் ஜனவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை பிரஜைக்கு எதிராக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் வழக்கு
Reviewed by NEWMANNAR
on
December 15, 2014
Rating:

No comments:
Post a Comment