அண்மைய செய்திகள்

recent
-

யாருக்கு ஆத­ரவு என்­பது குறித்து தமி­ழ­ர­சுக்­கட்சி தீர்­மா­னிக்­க­வில்லை : மாவை சேனா­தி­ராஜா

அடுத்த வருடம் ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது குறித்து தமி­ழ­ர­சுக்­கட்சி தீர்­மா­னிக்­க­வில்லை என்று தெரி­வித்­துள்ள அக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா அனைத்து உறுப்­பி­னர்­க­ளிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட கருத்­துக்களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தீர்­மானம் எடுக்­கப்­பட்டு அர­சியல் குழு­விடம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் சம­கால நிலை­மைகள் தொடர்­பாக ஆராயும் விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்­றைய தினம் வவு­னி­யாவில் நடை­பெற்­றது. காலை 10மணிக்கு ஆரம்­ப­மான இக்­க­லந்­து­ரை­யாடல் மாலை 5மணி­வரை நடை­பெற்­றது. தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தலை­மையில் நடை­பெற்ற இக் கலந்­து­ரை­யா­டலில் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்இ மாகாண சபை உறுப்­பி­னர்கள்இ உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் ஏனைய அங்­கத்­த­வர்­களும் பங்­கேற்­றி­ருந்­தனர். இதன் போது எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக ஒவ்­வொரு அங்­கத்­த­வரின் கருத்துக்களையும் தனித்­த­னி­யாக கேட்டுப் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தோடு அவை தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வி­டயம் தொடர்­பாக கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சோனா­தி­ராஜா கூறு­கையில்,

நாம் இன்றைய (நேற்று) தினம் சம­கால அர­சியல் தொடர்­பான பல்­வேறு விடங்கள் தொடர்­பாக விரி­வாக ஆராய்ந்­திருந்தோம். இக்­க­லந்­து­ரை­யா­டலில் ஜ­னா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்ற விடயம் தொடர்­பாக முக்­கிய கவனம் செலுத்­தப்­பட்டது. அதன் அடிப்­ப­டையில் எமது கட்­சியின் ஒவ்­வொரு உறுப்­பி­ன­ரு­டைய கருத்­தையும் தனித்­த­னி­யாகப் பெற்­றுக்­கொண்டோம். சில முரண்­பா­டான விட­யங்கள் தொடர்பில் தெளிவு­களை பெறு­வ­தற்­காக விரி­வாக எமக்­கி­டையில் கலந்­து­ரை­யா­டினோம்.

இருப்­பினும் இந்த தேர்­தலில் நாம் யாரை ஆத­ரிக்­கப்­போ­கின்றோம் என்­பது தொடர்பில் இறுதித் தீர்­மா­னத்தை எடுக்­க­வில்லை. இருப்­பினும் மக்­க­ளி­ட­மி­ருந்தும் உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்தும் பெற்­றுக்­கொண்ட கருத்­துக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தொரு முடிவை 9பேர் கொண்ட எமது அர­சியல் குழு­விடம் சமர்ப்­பிக்­க­வுள்ளோம்.

அத்துடன் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவில் தங்கியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெகு விரைவில் நாடு திரும்பவுள்ள நிலையில் அவர் தலைமையிலான உயர் குழுவினருடன் ஆராய்ந்து தீர்க்கமான இறுதி முடிவொன்றை அறிவிக்கவுள்ளோம் என்றார்.
யாருக்கு ஆத­ரவு என்­பது குறித்து தமி­ழ­ர­சுக்­கட்சி தீர்­மா­னிக்­க­வில்லை : மாவை சேனா­தி­ராஜா Reviewed by NEWMANNAR on December 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.