அண்மைய செய்திகள்

recent
-

வன்னி எம்.பிகளான செல்வம்,வினோ ஆகியோரை ஜப்பான் நாட்டு தூதரகத்தின் அரசியல் துரை பொறுப்பாளர் கொதோ காயா சந்திப்பு(படங்கள்)

ஜப்பான் நாட்டு தூதரகத்தின் அரசியல் துரை பொறுப்பாளர் 'கொதோ காயா' இன்று புதன் கிழமை காலை வவுனியாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அலுவலகத்தில் இன்று(24) புதன் கிழமை காலை டெலோ இயக்கத்தின் தலைவரும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளார்.

குறிப்பாக தற்போது இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்,தற்போதைய அரசியல் சூழ்நிலை,மற்றும் வன்னியின் நிலவரம் ஆகியவை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதோடு தமிழ் மக்களின் நிலவரம் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜப்பான் நாட்டு தூதரகத்தின் அரசியல் துரை பொறுப்பாளர் கொதோ காயா தெழிவாக கேட்டரிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


வன்னி எம்.பிகளான செல்வம்,வினோ ஆகியோரை ஜப்பான் நாட்டு தூதரகத்தின் அரசியல் துரை பொறுப்பாளர் கொதோ காயா சந்திப்பு(படங்கள்) Reviewed by NEWMANNAR on December 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.