அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முசலியில் ஹீனைஸ் பாரூக் எம்.பிக்கு மகத்தான வரவேற்பு-ஆதரவாளர்கள் தடுக்கப்பட்டமைக்கு கண்டனம்.=Photos

மன்னார் மாவட்டத்தின்,முசலிப்பிரதேச சமூகம் ஒன்னிணைந்துவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் அவர்களை வரவேற்கும் மாபெரும் வரவேற்பு விழா நேற்று (16-12-2014 செவ்வாய்க்கிழமை  மாலை சிலாவத்துறையில் இடம்பெற்றது.

 சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் அவர்களை வரவேற்கும் இம் மாபெரும் வரவேற்பு வைபவத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர்களான  அசாத் சாலி,முஜிபுர் ரஹ்மான்,  பைரூஸ் ஹாஜியார், வடமாகாணசபை உறுப்பினர்  அஸ்மி அய்யுப், மற்றும் வடமாகாண சபை வேற்பாளர் முனாஜித் சீலானி, ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர்கள் உற்பட பல பிரமுகர்களும், பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் அவர்களை முசலி பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றினைந்து வரவேற்றனர்.

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முசலி பிரதேச சபையின் முன்னால் வேட்பாளர்  றஸ்மி அப்துல் ரஸீத் கட்சியிலிருந்து விலகி ஜனாதிபதி பொது  வேட்பாளர்  மைத்திரிபால சிறிசேன வை ஆதரிப்பதற்காக தெரிவித்து  ஹீனைஸ் பாரூக் எம்.பி யுடன் இணைந்து கொண்டார்.


இதே வேளை நேற்று செவ்வாய்க் கிழமை மாலை மன்னார் முசலி பிரதேசத்தில் தனக்கு இடம் பெற்ற மகத்தான வரவேற்பு நிகழ்விற்கு மன்னார் எருக்கலம்பிட்டி,புதுக்குடியிறுப்பு போன்ற கிராமங்களில் இருந்து  கலந்து கொள்ள வருகை தந்த மக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அச்சுரூத்தி இடை மறித்த கோழைத்தனமான செயலை தான் வண்மையாக கண்டித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.

-குறித்த நிகழ்வில் கலந்து கொண்டால் இனி வரும் காலங்களில் குறித்த கிராமத்திற்கு எவ்வித அபிவிருத்தி பணிகளையும் தான் செய்ய மாட்டேன் எனவும் மீறிச் சென்றால் வாகனங்களை சேதப்படுத்தப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.

-எனவே அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது.யாரும் எந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியும்.எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் மேலும் தெரிவித்தார்.









மன்னார் முசலியில் ஹீனைஸ் பாரூக் எம்.பிக்கு மகத்தான வரவேற்பு-ஆதரவாளர்கள் தடுக்கப்பட்டமைக்கு கண்டனம்.=Photos Reviewed by NEWMANNAR on December 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.