அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு 9ஆம் திகதி மாலை!


இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும்

வேட்பாளர் எதிர்வரும் 9ஆம் திகதி மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் 12,314 நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளதாகவும், இந்த வாக்குகள் 1419 நிலையங்களில் எண்ணப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இம்முறை 15,044,490 பேர் (ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 490) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி இரவு 10 மணியளவில் முதலாவது தபால் மூலவாக்களிப்பு முடிவை அறிவிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி சார்பாக 17 வேட்பாளர்களும், இரண்டு சுயாதீன வேட்பாளர்களுமாக மொத்தம் 19 பேர் போட்டியிடுகின்றனர்.

அத்துடன், நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள கட்அவுட், பாதைகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றுவதற்காக காவல்துறையுடன் இணைந்து தேர்தல் ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் இன்று முற்பகல் முதல் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு 9ஆம் திகதி மாலை! Reviewed by NEWMANNAR on January 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.