அண்மைய செய்திகள்

recent
-

டில்லியில் கடும் பனிப்பொழிவு : 21 விமான சேவைகள் இரத்து

டில்­லியில் நேற்று காலை நில­விய கடும் பனி மூட்டம் கார­ண­மாக 21 விமான போக்­கு­வ­ரத்து சேவைகள் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தோடு 47 விமான சேவைகள் காலதாம­த­மா­கி­யுள்­ளன.

இது தொடர்பில் மேலும், தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

டில்­லியில் தற்­போது கடு­மை­யான பனிப்­பொ­ழிவு மற்றும் குளிர்­மை­யான கால­நிலை நில­வு­கின்­றது. இதனால் , விமான நிலைய பகு­தி­களில் 50 மீற்றர் தூரத்­திற்கு மட்­டுமே காட்­சிகள் தெரி­கின்­றன. பரி­தாபாத், நொய்டா மற்றும் காசி­யாபாத் ஆகிய நகர்ப்­புறப் பகு­தி­க­ளிலும் கடும் பனி­மூட்டம் காணப்­ப­டு­கி­றது. நேற்று காலை 5.30 மணிக்கு 8 டிகிரி செல்சிஸ் வெப்பம் பதி­வா­கி­யுள்­ளது. இதனால், மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், வட மாநி­லங்­க­ளான பஞ்சாப், ஆரி­யானா, டில்லி, மேற்கு உத்­த­ரப்­பி­ர­தேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநி­லங்­களில் தொடர்ந்து கடும் பனி­மூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டில்லியில் கடும் பனிப்பொழிவு : 21 விமான சேவைகள் இரத்து Reviewed by NEWMANNAR on January 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.