அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாணசபையிலும் விரைவில் ஆட்சி மாற்றம்?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட சில மாகாண சபைகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

வடக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணசபைகளும் மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளன.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அந்தக் கூட்டணியின் பங்காளி கட்சிகள் சில அதிலிருந்து விலகின. சில மாகாணசபை உறுப்பினர்களும் எதிரணியுடன் இணைந்து கொண்டார்கள். எதிரணியிலிருந்து ஆளுந்தரப்புக்கும் சிலர் மாறினார்கள்.

37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு 15 உறுப்பினர்களை வென்றிருந்தாலும் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (7 உறுப்பினர்கள்) ஆதரவை பெற்று ஆட்சியை அமைத்துக் கொண்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பொது எதிரணியுடன் இணைந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை எந்த நேரத்திலும் இழக்கும் நிலை சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் தற்போதைய நிலவரத்தின்படி, 22 உறுப்பினர்களை கொண்டிருந்த ஆளும் தரப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ள நிலையில் எதிரணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து 11 உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி (4 உறுப்பினர்கள்) ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பற்கான முயற்சிகளை மேற்கொண்ருந்தாலும் இறுதி நேரத்தில் அது கை கூடவில்லை.


தற்போது கிழக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

கிழக்கு மாகாணசபையிலும் விரைவில் ஆட்சி மாற்றம்? Reviewed by NEWMANNAR on January 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.