அண்மைய செய்திகள்

recent
-

உலகத் தமிழ் இணைய மாநாடு இம்முறை சிங்கப்பூரில்


14 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே 30 முதல் ஜூன் முதலாம் திகதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500 ற்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் வருகை தர உள்ளனர்.

‘உலகத் தமிழ் தகவல்தொழில்நுட்ப மன்றம்’ என்ற அமைப்பு உலகின் பல நாடுகளில் அரசுடனும் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து இந்த தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இலங்கை, இந்தியா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க் கணினி வல்லுநர்கள் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள், இண்டர்நெட், செல்போன் கருவிகளில் தமிழின் பயன்பாடு பற்றி சிறப்புக் கருத்தரங்குகள் நடத்த உள்ளனர்.
உலகத் தமிழ் இணைய மாநாடு இம்முறை சிங்கப்பூரில் Reviewed by NEWMANNAR on February 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.