அண்மைய செய்திகள்

recent
-

நல்லாட்சிக்கான மைத்திரி அரசு என்றால் மஹிந்த அரசியலில் இருந்து ஊழல் புரிந்தவர்களை வெளியேற்றவும்.இ.குமரேஸ்-Photos

நல்லாட்சிக்கான ஏற்பாட்டாளர்களே கடந்த ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இப்புதிய அரசு வரும் வரை நடை பெற்ற அனைத்து விதமான சர்வாதிகார அடக்கு முறை நிறைந்த ஊழல் மலிந்த ஆட்சி நடைபெற்றது.


உண்மை என்று உங்கள் அரசு ஏற்றுக்கொண்டால் ஏன் ஊழல்கள் புரிந்தவர்களை உங்கள் அமைச்சரவையில் உயர் சபைகளில் பதவிகளை வழங்கி இருக்கிறீர்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவதாக மன்னார் நகர சபை உறுப்பினரும்,ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.ரெட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இன்று(11) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

எமது மாவட்டத்தில் நடைபெற்ற சர்வாதிகார நிர்வாக முறைகேடுகள், சீர்கேடுகள், ஊழல்கள் அபகரிப்புக்கள் அனைத்தையும் கடந்த ஆட்சியில் செய்தவர் உங்கள் தற்போதைய அரசில் ஆட்சியிலுள்ள அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களே ஆவார்.

தெளிவாக கூறினால் வேலைவாய்ப்புக்களில் வெளிப்படையான நேர்முகப்பரீட்சைகள் இன்றி அரசியல் ரீதியான நியமனங்களான சமுர்த்தி, சுகாதாரப்பணியாளர்கள், போக்குவரத்துசபைப் பணியாளர்கள், இடம்பெயர்ந்த முகாம் மேற்பார்வையாளர்கள் அரச திணைக்களங்களில் நிரந்தர நியமனங்கள் வழங்கியமை மற்றும் அரச, தனியார் காணிகள் அபகரிப்பு தலைமன்னார், கீளியன்குடியிருப்பு மன்னார் நகரப்பகுதியில் காமென்ஸ் பிரதேசம் அமைந்துள்ள காணி, பழைய போக்குவரத்துச்சபைக்காணி, ஆங்கிலப் பயிற்சி மையத்திற்கு அருகாமையிலுள்ள காணி பரப்புக்கடந்தான், சன்னார் மடுபகுதி போன்ற பல இடங்களில் வௌ;வேறு பெயர்களில் அபகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மீள் எழுச்சித்திட்டத்தில், கெயார் திட்டத்தில் செய்யப்பட்ட பல குளங்கள,; வீதிகள் என பல அபிவிருத்தி வேலைகளுடாக பாரிய மோசடிகள் நடைபெற்றதாக மக்கள் சுட்டிக்காட்டுகன்றனர்.

அதே போன்று அபிவிரு;திக்குழு என்ற ரீதியில் அரச உத்தியோகத்தர்களை தனக்கு சாதகமான முறையில் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தினார். குறிப்பாக சமுர்த்தி ஊழியர்களை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியது போன்ற பல விடயங்கள் உள்ளன.

இதற்கு ஆதாரமாக வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் சNhகாதருமான றிப்கான் பதியுதீன் அவர்களே வடமாகாண சபை அமர்வில் வேலைவாய்ப்புக்களை அரசியல் நோக்கில் வழங்கியது நூறு வீத உண்மை என்பதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையே ஒரு சான்றாக கருத முடியும். எனவே எதிர்கால நல்லாட்சியை கருத்தில் கொண்டு விசேட குழுக்களை அமைத்து விசாரித்து உண்மைத்தன்மைகளை கண்டறிந்து நீதி வழங்குவதோடு தவறு செய்தவர்கள் தங்களது ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு இம் மாவட்ட மக்களின் மனக்காயங்களை போக்கி இப்புதிய அரசில் நம்பிக்கைiயை மிளிரச் செய்வீர்கள் என மாவட்ட மக்கள் சார்பாக வேண்டி நிற்கின்றேன்.என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான மைத்திரி அரசு என்றால் மஹிந்த அரசியலில் இருந்து ஊழல் புரிந்தவர்களை வெளியேற்றவும்.இ.குமரேஸ்-Photos Reviewed by NEWMANNAR on March 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.