அண்மைய செய்திகள்

recent
-

புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளிகளை சந்தித்த அமைச்சர் பா.டெனிஸ்வரன்.-Photos



விடுதலைப் போராட்டத்துக்காக தங்களை அர்ப்பணித்து தற்போது புனர்வாழ்வு பெற்று குடும்பங்களுடன் வாழும் முன்னாள்  போராளிகளுக்கும், போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்களுக்கும், அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்கும் வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பல்வேறு உதவித்திட்டங்கள் மேற்கொள்ளுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

உதவித் திட்டங்களை வழங்குவதற்காக தற்போது தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.இதன் ஒரு கட்டமாக கடந்த 6 ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மாவீரர்களின் குடும்பங்கள், காணாமல் போனோரின் பெற்றோர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் (1000) மேற்ப்பட்டவர்கள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் போது அவர்களின் இன்றைய நிலைமை தொடர்பாக அமைச்சருக்கு தெளிவு படுத்தினர்.

இதன் போது தாங்கள் எந்த உதவிகளும் இன்றி இருப்பதாகவும் தங்களின் இந்த உதவித் திட்ட முயற்சியை நாங்கள் வெகுவாக வரவேற்பதுடன் இதற்காக தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் அமைச்சருக்கு உறுதியளித்துள்ளனர்.

புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மரணமடைந்த போராளிகளின் குடும்பங்களையும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இவ்விடயத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது போன்று அரசியல் கலப்படமின்றி செல்வதே எல்லோருக்கும் நன்மை பயக்குமென்றும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த சவால்கள் வந்தாலும் அதற்க்கு முகம் கொடுக்க தயார் எனவும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவித்தார்.






புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளிகளை சந்தித்த அமைச்சர் பா.டெனிஸ்வரன்.-Photos Reviewed by NEWMANNAR on March 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.