அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட கல்வி முன்னேற்றத்திற்காகவே எனது முன்னுரிமை-றிப்பகான் பதியுதீன்.-Photos



மன்னார் மாவட்டத்தின் கல்வி முன்னேற்ற மற்றும் கற்கை சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முசலி கூளாங்குளம் பாடசாலையின் விளையாட்டு போட்டி நேற்று(4) இடம் பெற்றது. இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,



இன்று இந்த பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்த கிடைத்தமைக்கு பாடசாலை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாடசாலைக்கான கட்டிடம் தொடர்பில் அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிசாத் பதியுதீன் அவர்களுடன் கலந்துரையாவுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் முசலி பிரதேச சபை தலைவர் எம்.யஹ்யான்,மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் உட்பட பலரம் கலந்து கொண்டனர்.

மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தமது மாகாண பாதீட்டு நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஜெனரேட்டர் மற்றும் உபகரணங்களை பாடசாலை அதிபரிடத்தில் கையளித்தார்.



மன்னார் மாவட்ட கல்வி முன்னேற்றத்திற்காகவே எனது முன்னுரிமை-றிப்பகான் பதியுதீன்.-Photos Reviewed by NEWMANNAR on March 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.