மன்னார் ஆயரின் பவள விழா மலருக்கு ஆக்கங்கள் கோரல்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் தனது 75வது அகவையில் காலடி பதித்துள்ள இவ்வேளையில் அவர் தனது சமயப் பணிகளோடு தமிழ் மக்களுக்கு ஆற்றிவரும் மகத்தான பணிகளைக் கௌரவிக்கும் வகையில் மன்னார் மக்கள் சார்பாக அவருடைய பவள விழாவினை எதிர்வரும் 23.05.2015 அன்று சிறப்பான முறையில் மன்னாரில் கொண்டாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பவள விழா ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக 'மன்னார் ஆயரின் பவள விழா ஒருங்கிணைப்புக் குழு' என்ற பெயரில் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய மக்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த விழாவின் போது பவள விழா மலர் ஒன்றையும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மலரில் இடம்பெறுவதற்கான தங்களுடைய செய்தியை வாழ்த்துரையாகவோ, கட்டுரையாகவோ, அனுபவப் பகிர்வாகவோ, கவிதையாகவோ (எந்த வடிவத்திலேனும்) அனுப்பிவைக்குமாறு பவள விழா மலர்க்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தங்கள் ஆக்கத்தை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் மலர்க்குழுவுக்கு அனுப்பிவைக்கும்படியும், இத்திகதிக்குப் பின்னர் வரும் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும், கிடைக்கப்பெறும் ஆக்கங்களை பரிசீலித்து மலரில் இடம்பெறச்செய்வதா இல்லையா என்பதை மலர்க்குழுவே தீர்மானிக்கும் என்பதையும் மலர்க்குழு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
தங்கள் ஆக்கங்களை தபால் மூலமாக அனுப்புவதாயின் 'அருட்திரு. தமிழ் நேசன், மன்னார் ஆயரின் பவளவிழா மலர்க்குழுத் தலைவர், கலையருவி, 116/3, புனித சூசையப்பர் வீதி, பெற்றா, மன்னார்' என்ற முகவரிக்கும், மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாயின் nesanmnr@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கம் 023 – 2250789 / 023 – 3233276 /077 – 7429811.
மன்னார் ஆயரின் பவள விழா மலருக்கு ஆக்கங்கள் கோரல்.
Reviewed by NEWMANNAR
on
April 23, 2015
Rating:
No comments:
Post a Comment