ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வு நாளை (30) அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் ஆசிய உதவியாளர்களுக்கான பாடசாலைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இதற்கமைய பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கான ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு மே மாதம் 8 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இது தொடர்பான அறிவித்தல்கள் விண்ணப்பதாரிகளுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்தார்.
ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு
Reviewed by NEWMANNAR
on
April 29, 2015
Rating:

No comments:
Post a Comment