அண்மைய செய்திகள்

recent
-

சீகிரியா சுவருக்கு சேதம் விளைவித்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த யுவதி விடுதலை-Photos


கிரியா சுவருக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த யுவதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சின்னத்தம்பி உதயசிறி அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.


சீகிரியா சுவருக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மட்டக்களப்பு, சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி சீகிரிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

தம்புளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தமது யுவதிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அவரது தயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

ஆயினும், உதயசிறி சார்பாக கண்டி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்கள் காரணமாக அவரை விடுதலை செய்வதில் சட்ட ரீதியான தாமதம் நிலவிவந்தது.

கண்டி மேல் நீதிமன்றத்தில் உதயசிறியின் சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்கள் அவரது சட்டத்தரணிகளால் நேற்று மீளப் பெறப்பட்டிருந்தன.

இந்த நிலைமையின் கீழ், இன்று காலை உதயசிறி விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




சீகிரியா சுவருக்கு சேதம் விளைவித்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த யுவதி விடுதலை-Photos Reviewed by NEWMANNAR on April 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.