ஒற்றுமைக்கு இலக்கணமாய் மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தினர் திகழ்கின்றனர்.பாடெனிஸ்வரன்.-Photos
ஒற்றுமைக்கு இலக்கணமாய் மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தினர் திகழ்வதை பாராட்டுவதாக வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தினரை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸவரன் நேற்று (21) செவ்வாய்க்கிழமை மாலை சிகை அலங்கரிப்பாளர் சங்க ஒன்று கூடல் மண்டபத்தில் சந்தித்து சங்க அங்கத்தவர்கள் அனைவருக்கும் வரவிருக்கும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறிய அன்பளிப்பாக சாறம் வழங்கிவைத்த பின் அங்கு உரையாடுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் உள்ள சங்கங்களில் ஒற்றுமைக்கு இலக்கணமாய் திகழும் மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தினரை பாராட்டுகின்றேன்.
தொடர்ந்தும் இந்த ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள் என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் இச்சங்கத்திற்கு வழங்க நான் தயாராக இருக்கிறேன் என மேலும் தெரிவித்தார்..
ஒற்றுமைக்கு இலக்கணமாய் மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தினர் திகழ்கின்றனர்.பாடெனிஸ்வரன்.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 22, 2015
Rating:

No comments:
Post a Comment