முசலியில் மின்னல் தாக்கி இளைஞன் பலி.-Photos
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை பாலைக்குழி கிராமத்தில் நேற்று முந்தினம் திங்கட்கிழமை (20) மாலை மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபத்துறை பாலைக்குழி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நேற்று முந்தினம் திங்கட்கிழமை காலை அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் படகில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
கடும் மழை பெய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் போது மீன் பிடித்துக்கொண்டிருந்த மூத்த சகோதரனான முஹமட் சபாயுள்ளா ஜெசிம்(வயது-27) என்பவர் மின்னல் தாக்கியதினால் குளத்தினுள் விழுந்து விட்டார்.
மற்றைய இளைஞனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
குறித்த இளைஞர் உடனடியாக கரைக்கு வந்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக உறவினர்கள் குறித்த குளத்திற்கு சென்று தேடிய போதும் இளைஞனை மீட்கவில்லை.
மீண்டும் நேற்று(21) செவ்வாய்க்கிழமை காலை முதல் தேடிய போது குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
முசலியில் மின்னல் தாக்கி இளைஞன் பலி.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 22, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment