முருங்கன்,அடம்பன் வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளை நேரடியாக சென்று பார்வையிட்டார் வடமாகாண சுகாதார அமைச்சர்.
முருங்கன்,அடம்பன் வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளை நேரடியாக சென்று பார்வையிட்டார் வடமாகாண சுகாதார அமைச்சர்.
மன்னார் முருங்கன் மற்றும் அடம்பன் ஆகிய இரு வைத்தியசாலைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று(24) வெள்ளிக்கிழமை மாலை குறித்த இரு வைத்தியசாலைகளுக்கும் சென்றிருந்தார்.
முதலில் முருங்கன் வைத்தியசாலைக்குச் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் வைத்தியசாலை பணியாளர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையை சுற்றிப்பார்வையிட்டதோடு வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு உடனடியாக அவசர தேவைகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து அடம்பன் வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர் அடம்பன் வைத்தியசாலையின் வைத்தியர் கே.அரவிந்தன் அவர்களை சந்தித்து வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
இதன் போது அடம்பன் வைத்தியசாலைக்கு வடமாகாண வீதி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வருகை தந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை,மற்றும் நோயாளர் விடுதிகளை சுற்றிப்பார்த்து தேவையான உதவிகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.
சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்துடன் வடமாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா,தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முருங்கன்,அடம்பன் வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளை நேரடியாக சென்று பார்வையிட்டார் வடமாகாண சுகாதார அமைச்சர்.
Reviewed by NEWMANNAR
on
April 25, 2015
Rating:
No comments:
Post a Comment