மன்னார் மறைமாவட்ட கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் உதவிக்கரப்பிரிவின் பணிகளுக்காக உள்ளக ரீதியாக நிதிதிரட்டும் விழிப்புணர்வு கருத்தமர்வும் அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பும்.-Photos
மேற்படி நிகழ்வானது 23.04.2015 அன்று காலை 9.30 மணியளவில் வாழ்வுதயத்தின் கேட்போhர் கூடத்தில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் இயங்கும் வங்கி முகாமையாளர்கள் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் லீசிங் கம்பனிகளின் முகாமையாளர்கள் அரச திணைக்கள பிரதிநிதிகள் அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் மன்னார் சிவா கொட்டல் உரிமையாளர் மற்றும் உதவிக்கரப்பிரிவின் பயனாளிகள் கறிற்ராஸ்-வாழ்வதய அலுவலர்கள் என பலர் இதில் கலந்து சிறப்பித்தனர்.
இக்கருத்தமர்வில் பங்குபற்றிய முகாமையாளர் அவர்கள் விசேட உரை நிகழ்த்தினார். அத்தோடு ஏனைய வங்கி முகாமையாளர்களும் தத்தமது பங்களிப்புக்கள் தொடர்பாகவும் தமது கருத்தினை வெளியிட்டனர். அடுத்து வாழ்வுதய உதவிக்கரப் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பாக “பவர்பொயின்ற்” மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டது.
அத்தோடு உதவிக்கரப்பிரிவின் பணிகளுக்காக விசேட பயிற்சிகளைப் பெற்ற பணியாளர்களுக்கு கறிற்ராஸ்-வாழ்வதயத்தின் இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளாரினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் உதவிக்கரப்பிரிவின் மூலம் பயன் பெற்ற பயனாளிகள் இருவர் தத்தமது பயன்பாடுகள் தொடர்பாக தமது அனுபவங்களைப் பகிர்ந்து கறிற்ராஸ்-வாழ்வதயத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.
அடுத்து அதிஸ்டலாபச் சீட்டிழுப்பு நடைபெற்று அதிஸ்டம் பெற்ற நபர்களின் பெயர் மற்றும் எண்கள் இயக்குனரினால் வாசிக்கப்பட்டது. இறுதியில் உதவிக்கரப் பிரிவின் திட்ட முகாமையாளர் திரு எமில்றாஜ் (எமில்) அவர்களினால் நன்றியுரை இடம்பெற்றதுடன் மதிய உணவு வழங்கலுடன் 12.45 மணிக்கு நிகழ்வு முடிவுற்றது.
மன்னார் மறைமாவட்ட கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் உதவிக்கரப்பிரிவின் பணிகளுக்காக உள்ளக ரீதியாக நிதிதிரட்டும் விழிப்புணர்வு கருத்தமர்வும் அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பும்.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 25, 2015
Rating:
No comments:
Post a Comment