அவுஸ்திரேலிய ராஜதந்திரிகளுடன் வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு மன்னாரில் சந்திப்பு-photos
வடக்கு முஸ்லீம்களின் வெளியேற்றம், அகதிப்பிரசினைகள், மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு அவுஸ்திரேலிய தூதராலய உயரிஸ்தானிகர் எம்.ராபின் முடியுடன் இன்று செவ்வாய்க்கிழமை(7) மன்னாரில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் முஸ்லிம் நல்லுறவுகள் பற்றியும் அவை எதிர்காலத்தில் சீர்செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கபட்டது.
வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைவர் அஷ்ஷைக் முபாரக் மௌலவி அவர்களின் தலைமையில் கூடிய மேற்படி சந்திப்பில் அஷ்ஷைக் பி. நிஹ்மத்துல்லா அவர்களினால் வடக்கு முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய ராஜதந்திரிகளுடன் வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு மன்னாரில் சந்திப்பு-photos
Reviewed by NEWMANNAR
on
April 08, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 08, 2015
Rating:



No comments:
Post a Comment