மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் இன்று வியாழக்கிழமை) தனது 75 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு மன்னார் மாவட்டம்,மற்றும் மறைமாவட்ட மக்கள் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
நாட்டில் இடம் பெற்ற யுத்தம் முதல் தற்போது வரை குரல் அற்ற மக்களுக்காக குரல் கொடுத்து இலங்கை வாழ் மக்களின் விடிவிற்காக சர்வதேசத்தின் கண்பார்வையில் எமது மக்களை வெளிச்சப்படுத்தி தீர்வை பெற்றுக்கொடுக்க தனது உயிரை துச்சமென நினைத்து குரல் கொடுத்து வருகின்றவர் எமது ஆயர் அவர்கள்.
இந்த நாட்டில் அமைதியும்,சமாதானமும் ஏற்பட வேண்டும்.இன,மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் நல்லினக்கத்துடன் குரல் கொடுத்து வருகின்ற எமது ஆயர் மனிதபிமானத்தாலும்,உண்மையிலும் உயர்ந்தவர்.
உன்னதமானவரும்,இறை மகன் இயேசுவின் வாழ்வை பிரதிபலிகின்றவருமாகிய எமது ,ஆண்டகை அவர்களுடைய 75 ஆவது பிறந்த நாளில் இறைவனுக்கு நன்றி கூறி ஆண்டகையை வாழ்த்தி நிற்கின்றோம்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் இன்று வியாழக்கிழமை) தனது 75 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.
Reviewed by NEWMANNAR
on
April 16, 2015
Rating:

No comments:
Post a Comment