அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும்,வடமாகாண அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு.-Photos



மன்னார் மாவட்டத்தில் உள்ள பல வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ள நிலையில் புனரமைப்புக்களை மேற்கொள்ளுவது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிற்கும்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாவட்டச் செயலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் கிரவல் மண் அளவிற்கு அதிகமாக அகழப்படுவதினால் கிரவல் மண் அகழ்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் வீதிகளை அபிவிருத்தி செய்ய எமது வளத்தை பயன்படுத்துவதன் மூலம் பல வீதிகளை புனரமைக்க முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வீதி அபிவிருத்தி பணிகளுக்கு கிரவல் அகழ்வதற்கான விசேட அனுமதியும் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட சந்திப்பின் போது வவுனியா மன்னார் வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் எஸ். ரகுநாதன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும்,வடமாகாண அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு.-Photos Reviewed by NEWMANNAR on April 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.