அண்மைய செய்திகள்

recent
-

யுத்தத்தின் போது உயிரிழந்த இராணுவ வீரர்கள் மீண்டும் ஒருமுறை பிறக்க வேண்டும் : ஜனாதிபதி மைத்திரி


இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர்கள் மீண் டும் ஒரு­முறை பிறக்க வேண்டும் என பிரார்த்­திப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நேற்று பத்­த­ர­முல்­லையில் உள்ள இறுதிக் கட்ட யுத்­தத்தில் உயிர் நீத்த இரா­ணு­வத்­தினரின் நினைவு தூபிக்கு அஞ்­சலி செலுத்தும் நிகழ்வின் போதே அவர் மேற் கண்­ட­வாறு தெரி­வித்தார். இந் நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்­க­ளான கரு ஜய­சூ­ரிய, ஏ.எச்.எம் பௌஸி, ரவி கரு­ணா­நா­யக்க, சஜித் பிரே­ம­தாஸ, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஆகியோரும் கலந்து கொண்­டனர். இதன் போது தொடர்ந்தும் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, நாட்டின் இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது தமது உற­வு­களை பிரிந்து சென்று நாட்­டிற்­காக இரா­ணு­வத்­தினர் போரா­டினர். அவர்­க­ளுக்கு இறந்த பின்பே நம்மால் அஞ்­சலி செய்ய முடிந்­துள்­ளது. சுதந்திர காற்றை மீண்டும் சுவாசிக்க இலங்கையருக்கு வழி செய்த இராணுவத்தினர் மீண்டும் பிறக்கவேண்டும் என்றார்.
யுத்தத்தின் போது உயிரிழந்த இராணுவ வீரர்கள் மீண்டும் ஒருமுறை பிறக்க வேண்டும் : ஜனாதிபதி மைத்திரி Reviewed by Author on May 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.