கொரியாவில் வேலை வாய்ப்பு! மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம்: வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதற்கு எந்தவொரு தனி நபருக்கும் முடியாது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பணிப்பாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சரின் அமைப்பாளர் எனக் கூறிக் கொண்டு கொரியாவில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்து பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் 83,000 ரூபா பணத்தினைப் பெற்று ஏமாற்றியுள்ளார்.
குறித்த நபரை கொழும்பு கோட்டை பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறும் நபர்களிடம் அவதானமாக இருக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
கொரியாவில் வேலை வாய்ப்பு! மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம்: வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
Reviewed by Admin
on
May 14, 2015
Rating:

No comments:
Post a Comment