மன்னார் அல்லிராணிக்கோட்டையினை பாதுக்க தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் ஆரம்பம்.- Photos
மன்னார் மாவட்டம் சிலாபத்துறையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க டொரிக் மண்டபம் என அழைக்கப்படும் அல்லிராணிக்கோட்டையினை பாதுக்கும் வகையில் தற்போது தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம் பெற்று வருகின்றது.
பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலப்பகுதியில் குறித்த டொரிக் மண்டபம் என அழைக்கப்படும் அல்லிராணிக்கோட்டையினை ஆளுனர் பிரட்றிக் நோர்த்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிலாபத்துறை கடலையின் தாக்கம் காரணமாக தற்போது குறித்த கோட்டை சேதமடைந்து அழிவுறும் நிலையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க குறித்த அல்லிராணிக்கோட்டையினை பாதுகாக்கும் நோக்கில் கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் 60 மில்லியன் ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புக்களை அமைத்து வருகின்றனர்.
இலங்கையின் கரையோரத்தை நிர்வகித்த முதலாவது பிரித்தானிய ஆளுநரான பிரட்றிக் நோர்த் (கி.பி.1798 ஆண்டு முதல் 1805 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இவர் கரையோர வர்த்தகத்தை கண்காணிக்கும் முகமாகவும் தமது வாசஸ்தலமாகவும் இந்த மாளிகையை பயன்படுத்தி வந்துள்ளார்.
மன்னார், அரிப்பு கடலுக்கு அருகில் உள்ள ஒரு கற்பாறையின் மேல் செங்கற்களையும் சுண்ணாம்பையும் கொண்டு மிகவும் பாதுகாப்பான முறையில் திட்டமிட்டு இது அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாளிகையில் நான்கு சிறிய அறைகளைக் கொண்ட கீழ் மாடி காணப்படுவதுடன், வீட்டின் மத்திய பகுதியில் உள்ள படிக்கட்டு ஊடாக மேல்மாடிக்கும் செல்ல முடியும்.
மிகப்பெரிய சாப்பாட்டு அறையும் ஆளுநரின் உறங்கும் அறையும் இதில் அமைந்துள்ளன.
இந்த மாடிக்கட்டடத்தின் அருகில் இரு கட்டடங்கள் காணப்பட்டுள்ளன.
அவை தற்போது முற்றாக சிதைவடைந்து அத்திவாரம் மட்டுமே எஞ்சியுள்ளன.
இந்த மாளிகையின் வடிவமைப்பு பிரட்டிக் நோர்த் ஆளுநராலேயே மேற்கொள்ளப்பட்டதுடன் பெரிய தூண்களை (டொரிக்) கொண்டு அமைக்கப்பட்ட கிரேக்க நாட்டு வீட்டு நிர்மாணக் கலையாகும்.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் டொறிக் கோட்டையினை மையமாக வைத்த முத்து வியாபாரமும் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தற்போது குறித்த டொரிக் மண்டபம் என அழைக்கப்படும் அல்லிராணிக்கோட்டை சிதைவடைந்து பராமரிப்பற்ற நிலையில் காணப்பட்ட நிலையில் கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் தடுப்புச்சுவர்களை அமைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் அல்லிராணிக்கோட்டையினை பாதுக்க தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் ஆரம்பம்.- Photos
Reviewed by NEWMANNAR
on
May 14, 2015
Rating:
No comments:
Post a Comment