அண்மைய செய்திகள்

recent
-

தொழிலாளர் தினமாகிய இன்று விவசாய கிராமத்திற்கு செல்லும் வீதியின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்த டெனிஸ்வரன்.-Photos

உலக தொழிலாளர் தினமாகிய இன்று(1) வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு விளங்கும் கற்கிடந்த குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியினை புனரமைக்கும் பணியினை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

மன்னார்-மதவாச்சி ஏ-14 பிரதான வீதியின் கற்கிடந்த குளம் கிராம சந்தியில் இருந்து கற்கிடந்த குளம் தேவாலயம் வரை செல்லும் பிராதன வீதியானது மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.

-இதனால் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.இந்த நிலையில் குறித்த விவசாய கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த வீதியினை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை இன்று வெள்ளிக்கிழமை காலை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

இவ் வேலைத்திட்டத்தினை மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது.





தொழிலாளர் தினமாகிய இன்று விவசாய கிராமத்திற்கு செல்லும் வீதியின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்த டெனிஸ்வரன்.-Photos Reviewed by NEWMANNAR on May 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.