மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மே தின கொண்டாட்டம்.-Photos
மே தின கொண்டாட்டம் நாட்டின் பல பாகங்களிலும் அனுஸ்ரிக்கப்பட்டது.இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் பல மீனவ கிராமங்களில் மே தின கொண்டாட்டம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மன்னார் பேசாலையில் மே தினம் கொண்டாடப்பட்டது.இன்று(1) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் பேசாலை கடற்கரையில் உள்ள புனித கூ10சையப்பர் திருச் சொரூபத்திற்கு முன்பாக பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை விக்டன் அவிதப்பர் தலைமையில் 5 குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து புனித சூசையப்பர் திருச் சொரூபம் படகில் ஏற்றப்பட்டு பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை விக்டன் அவிதப்பர் தலைமையில் கடல் ஆசீர் வதிக்கப்பட்டதோடு மீனவர்களின் படகுகளும் ஆசீர் வதிக்கப்பட்டது.
பின் கடற்கரையில் இருந்து திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம் பெற்றது.
இதன் போது பேசாலையைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.இருதியில் பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இதே வேளை மன்னார் மாவட்டத்தில் தாழ்வுபாடு,அரிப்பு போன்ற மீனவ கிராமங்களிலும் மே தின கொண்டாட்டங்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மே தின கொண்டாட்டம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 01, 2015
Rating:

No comments:
Post a Comment