அண்மைய செய்திகள்

recent
-

மடு 'பூமலந்தான்' கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு கூரைத்தகரங்கள் வழங்கி வைப்பு.-Photos



மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து மடு 'பூமலர்ந்தான்' கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கு தற்காலிய வீடமைத்தலுக்கான கூரைத்தகரங்களை மன்னார் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தினால் நேற்று (21) வியாழக்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

லைக்கா மொபைல் நிறுவனத்தலைவரும்,ஞானம் அறக்கட்டளையினுடைய ஸ்தாபகருமான சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மடு பூமலந்தான் கிராமத்தில் ஏற்கனவே மீளக்குடியமர்ந்த 100 குடும்பங்களுக்கு தற்காலிய வீடமைத்தலுக்கான கூரைத்தகரங்களை ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் மிகுதி 185 குடும்பங்களுக்கும் நேற்று(21) வியாழக்கிழமை மாலை தற்காலிக வீடமைத்தலுக்கான கூரைத்தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு சமூதாய அடிப்படையிலான ஒருங்கினைக்கப்பட்ட வாழ்வாதார உதவித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,சிறப்பு விருந்தினராக மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் பணியாளர்கள்,கிராம சேவகர் ஆகியோர் கலந்து கொண்டு அந்த மக்களுக்கு கூரைத்தகரங்களை வழங்கி வைத்தனர்.

குறித்த நிகழ்வு மன்னார் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.




















மடு 'பூமலந்தான்' கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு கூரைத்தகரங்கள் வழங்கி வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on May 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.