மன்னார் சிலாபத்துறை கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 201 கிலோ கஞ்சா பொதி மீட்பு.
மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 201 கிலோ கிராம் நிறை கொண்ட கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபத்துறை கடற்கரை பகுதியில் பொதி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை (21) இரவு சிலாபத்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
உடனடியாக அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த பொதியை மீட்டு சோதனை செய்துள்ளனர்.
-இதன் போது 95 பொதிகளை கொண்ட 201 கிலோ கிராம் எடை கொணட கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-இது தொடர்பான விசாரனைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சிலாபத்துறை கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 201 கிலோ கஞ்சா பொதி மீட்பு.
Reviewed by NEWMANNAR
on
May 22, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 22, 2015
Rating:


No comments:
Post a Comment