மன்னார் பிரதேச வெண்மையாக்கல் உரிமையாளர் சங்கத்தினரை சந்தித்தார் வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்.-Photos
மன்னார் பிரதேச வெண்மையாக்கல் உரிமையாளர் சங்கத்தினரை அவர்களது சங்க மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(3) காலை வாடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
குறித்த சந்திப்பின் போது அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் செயல்ப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு,அவர்களது அத்தியாவசிய பிரச்சினைகளை முதலில் இனம் கண்டு அதனை முடிந்த அளவுக்கு உடன் சீர் செய்து தருவதாகவும், சங்கத்தின் ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள் அபிவிருத்திகளை நான் கொண்டுவருகிறேன் எனவும் அவர்களுக்கு அமைச்சர் உறுதி வழங்கினார்.
அதனை தொடர்ந்து கடந்த தொழிலாளர் தினத்தை ஒட்டி சங்க உறுப்பினர்களுக்கு சாரம் மற்றும் சேலை என்பவற்றை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பிரதேச வெண்மையாக்கல் உரிமையாளர் சங்கத்தினரை சந்தித்தார் வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 03, 2015
Rating:

No comments:
Post a Comment