அண்மைய செய்திகள்

recent
-

மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீள்குடியேற்றவும்


மீரி­ய­பெத்த மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்டு வீடு­களை இழந்து இன்று வரை இடம்­பெ­யர்ந்து வாழும் 77 குடும்­பங்­களை உட­ன­டி­யாக மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். அத்­தோடு யாழ்ப்­பாணம் வலி­கா­மத்தில் நிலக்கீழ் அசுத்த நீர் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தென்றும் அதி­கா­ரி­க­ளிடம் ஜனா­தி­பதி விளக்கம் கோரி­யுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று திங்கட் கிழமை மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் கூடிய தேசிய அனர்த்த முகா­மைத்­துவ சபைக் கூட்­டத்தின் போதே ஜனா­தி­பதி இவ் உத்­த­ரவை பிறப்­பித்­துள்ளார். இக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி மேலும் கருத்து தெரிவித்­ததாவது, மீரி­ய­பெத்த மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை மீள்­கு­டி­யேற்ற உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும்.இதனால் 77 குடும்­பங்கள் வீடு­களை இழந்து நிர்க்­க­தி­யா­கி­யுள்­ளனர். இவர்­க­ளுக்கு உட­ன­டி­யாக வீடு­களை அமைத்து கொடுக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி தெரிவித்­துள்ளார். இதன்­போது இதற்­கான காணிகள் அடை­யாளம் கண்­டி­ருப்­ப­தா­கவும் வீடு­களை அமைத்து கொள்­வ­தற்கு நிதியை வழங்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு இச் சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­பதி தொலை­பேசி மூலம் நிதி­ய­மைச்­சரின் செய­லா­ள­ருக்கு அறி­வித்­துள்ளார். அத்­தோடு எதிர் வரும் 14 ஆம் திகதி மீரி­ய­பெத்த பிர­தே­சத்­திற்கு அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் தலை­மையில் குழு அங்கு சென்று அறிக்கை சமர்ப்­பிக்­கவும் உத்­த­ர­விட்­டுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­திற்கு பிறகு அனர்த்த முகா­மைத்­துவ தேசிய சபை இன்றே கூடி­யுள்­ளது. இது கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கு­மென்றும் ஜனா­தி­பதி இதன்­போது தெரிவித்­துள்ளார். நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் அடிக்­கடி மண்­ச­ரிவு ஏற்­ப­டு­வது தொடர்பில் ஆராய்ந்து அதனை தடுப்­ப­தற்­கான வழி­வ­கை­களை ஏற்­ப­டுத்­து­மாறும் ஜனா­தி­பதி இதன்­போது உத்­த­ர­விட்­டுள்ளார். யாழ்ப்­பாணம் வலி­காமம் பிர­தே­சத்தில் நிலத்­திற்கு கீழான அசுத்த நீர் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஜனா­தி­பதி கேட்­ட­றிந்­த­தோடு மக்­களின் பிரச்­சி­னை­க­ளின்­போதும் மத்­திய அரசு மாகாண அரசு என பிரிந்­தி­ருக்­காது இணைந்து செயற்­பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார். இக் கூட்டத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, ரவூப்ஹக்கீம், மஹிந்த அமரவீர மற்றும் பலரும் ஜனாதிபதி செயலாளரும் கலந்து கொண்டனர்.

மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீள்குடியேற்றவும் Reviewed by Author on May 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.