பாடசாலை மாணவி சடலமாக மீட்பு
பாடசலை சென்ற மாணவி ஒருவர் வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்டுள்ளார். இச் சம்பவம் புங்குடுதீவுப் பகுதியில் இடம்பெற்றதுடன் அங்கு பதட்டமான நிலமையையும் ஏற்படுத்தியுள்ளது. புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 18 வயது மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். இச்சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று காலையில் வீட்டிலிருந்து பாடசாலை செல்வதாக புறப்பட்டு சென்றுள்ளார். பாடசாலை சென்ற மாணவி பிற்பகல் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு திரும்பாத நிலையில் தேடுதலை மேற்கொண்டுள்ளார்கள். அந்தவேளை மாணவி பாடசாலைக்கு வரவில்லையென்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் அம்மாணவி சம்பந்தமான எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் பாழடைந்த வீட்டுக்கு அருகாமையில் உள்ள பற்றையில் குறிப்பிட்ட மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்க்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் விசாரனைகளைத் தொடர்ந்து சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவி சடலமாக மீட்பு
Reviewed by Author
on
May 14, 2015
Rating:

No comments:
Post a Comment