

கர்நாடகா அரசு தினமும் 148 கோடி லீற்றர் கழிவுநீரை நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும் காவிரியில் மட்டும் 59 கோடி லீற்றர் கழிவுநீர் கலக்க விடுவதும் வெளிச்சத்துக்கு வந் துள்ளது. நிர்ணயித்த அளவை விட 10 மடங்கு மாசு அதிகம் உள்ளதை மாசுக் கட்டுப்பாட்டு வாரி யம் உறுதி செய்துள்ளதால் சட்ட ரீதியான நடவடி க்கை எடுத்து தடுக்க அரசு ஆலோசித்து வரு கிறது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங் களில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசு 1,928 கோடி ரூபாயில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. இந்த திட்டம் 2013 முதல் நடை முறையில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக் கள் குடிக்கும் தண்ணீர் சுகாதாரமானது தானா என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு காரணம் கர்நாடகாவில் இருந்து காவிரி யில் தினமும் 53 மில்லியன் லீற்றர் கழிவுநீர் கலக்க விடும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதனை கர்நாடகா அமைச்சரின் பேச்சு உறுதிபடு த்தி உள்ளது. சமீபத்தில் கர்நாடகா மேலவையில் பேசிய சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, பெங்க@ரில் உள்ள தனியார் நிறுவனங்கள் குடியிருப்பு பகுதிகளில் தினமும் குடிநீர் குழாய்கள் போர்வெல் மூலமாக 1,950 மில்லியன் லீற்றர் தண்ணீர்
பயன்படுத்தப்படுகிறது. இதில் 148 கோடி லீற்றர் கழிவுநீராக பலவகையில் ஆறுகள், கால்வாய்கள் வழியாக தமிழகத்துக்குள் செல்கிறது என தெரி வித்து உள்ளார். மேலும் பினாகினி, தென் பெண்ணை ஆறுகளின் வழியாக 88.9 கோடி லிற்றரும்; 59.3 கோடி லீற்றர் கழிவுநீர், அர்காவதி, காவிரி ஆறுகளில் கலந்து தமிழகத்துக்கு செல் கிறது. இவ்வாறு வீணாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து கோலார், சிக்பல்லாபு+ர் மாவட்டங்களில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு திருப்பி விட அரசு திட்டமிட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே காவிரியில் மாசுபட்ட நீர் கலக் கிறதா என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தர விட்டது. இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் காவிரியில் கலக்கும் நீரின் தன்மை குறித்து பரிசோதித்தனர்;. ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையிலேயே உள்ளன. நிர்ணய அளவை விட 10 மடங்கு அதிக அளவில் மாசு நிறைந்துள்ளது உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அறிக்கை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது என்றனர்.
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறியதாவது: கர்நாடகா பு+கோள ரீதியாக மேடான பகுதி என்பதால் அங் கிருந்து கழிவுநீர் நேரடியாக தமிழகத்தில் காவிரி யில் கலக்கும் சு+ழல் உள்ளது. நதியாக இருந்த காவிரி வடிகால்வாயாக மாற கர்நாடகாவே கார ணம். மாசுபட்ட நீரால் வேளாண் உற்பத்தி குறை ந்து விட்டது. மேட்^ர் அணை நீரும் வண்ணம் மாறி உள்ளது. குடிக்கவோ குளிக்கவோ உகந் தது அல்ல. பயன்பாட்டுக்கு ஒட்டுமொத்த மாசுக ளையும் நீக்க பலகட்ட சுத்திகரிப்பு முறை வேண்டும்.
இந்த நீரை பருகுவதால் டைபாய்ட்டு, மஞ்சள் காமாலை, எலும்பு, கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். சுற்றுச்சு+ழல் சுகாதாரம், பொருளாதார ரீதியான பாதிப்பு என்பதால் தமிழக அரசு இதில் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment