புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்கு மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தல்.Photos
பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையினை கண்டித்தும்,மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வு இன்று(23) சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் சங்கத்தின் செயலாளர் ஏ.நசூருதீன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது உயிரிழந்த மாணவி வித்தியாவிற்கு மன்னார் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதே வேளை குறித்த மாணவி துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையினை வன்மையாக கண்டிப்பதோடு குற்றவாளிகளுக்;கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க உறுப்பினர்கள்,மன்னார் தனியார் பேரூந்து சங்க உறுப்பினர்கள்,தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) முக்கியஸ்தர் ஜஸ்ரின் ஆகியோர் கலந்து கொண்டு மாணவி வித்தியாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்கு மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தல்.Photos
Reviewed by NEWMANNAR
on
May 23, 2015
Rating:
No comments:
Post a Comment