அண்மைய செய்திகள்

recent
-

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடும் அரசாங்கம்


புலம்­பெயர் தமி­ழர்களின் சர்­வ­தேச மா நாடு ஒன்றை கொழும்பில் நடத்த வெளி­வி­வ­கார அமைச்சு எடுத்­துள்ள தீர்­மா­னத்தை பாராட்டும் அதே­வேளை வடக்­கு கி­ழக்கு உட்­பட அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் எமது இரா­ணுவ வீரர்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போடும் நட­வ­டிக் ­கை­களை நாம் ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ளப் போவது இல்லை என பொது­பல சேனாவின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

புலம்­பெயர் தமி­ழர்­களை மட்டும் சந்­தோ­ஷப்­ப­டுத்­து­வதில் இந்த அரசு மும்­மு­ர­மாக செயற்­ப­டு­வ­தனை தவிர்த்து எமது பல்­லா­யிரக் கணக்­கான இரா­ணுவ வீரர்­களின் உயிர் தியா­கங்­களின் அர்ப்­ப­ணிப்­பினால் கிடைக்­கப்­பெற்ற தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த தவ­றி­வி­டக்­கூ­டாது எனவும் சுட்­டி­காட்­டினார்.

கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள பொது­பல சேனா பௌத்த அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு அதன் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம் பெற்­றது. இதன் போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைப்பின் பொதுச் செய­லாளர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

புதிய அரசின் வெளி­விவ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அண்­மையில் லண்டன் மாநாட்டில் புலம்­பெயர் தமி­ழர்­க­ளு­ட­னான அல்­லது விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வா­ளர்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினார் என்­பது தொடர்பில் எமக்கு எவ்­வித தெளி­வான தக­வல்­களும் இல்லை. இது தொடர்பில் அர­சா­னது அனைத்து மக்­க­ளுக்கும் விளக்­க­ம­ளிப்­பது அவ­சியம்.

இவ்­வா­றான நிலையில் வெளி­வி­வ­கார அமைச்சர் எமது நாட்­டி­லி­ருந்து வெளி­யே­றிய நாட்டுப் பற்­றுள்ள புலம்­பெயர் தமி­ழர் க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டி­ருக்கும் பட்­சத்தில் அதனை நாம் பாராட்­டு­ கின்றோம். அவ்­வாறே எமது நாட்டின் யுத்­த ­கா­லப்­ப­கு­தி­யிலும் அதற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் எமது நாட்டில் இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்கள் மட்­டு­மல்ல பௌத்த, சிங்­கள மற்றும் முஸ்லிம், கிறிஸ்­தவ மக்­களை மீள குடி­யேற்றும் நட­வ­டிக்­கை­களை அரசு முன்­னெ­டுக்­கு­மாயின் அவை மிகவும் பாராட்­டத்­தக்­கது.

சிறு­பான்மை இன சமூகம் தொடர்பில் அக்­கறை செலுத்தும் இந்த அர­சா­னது பௌத்த சிங்­கள மக்­க­ளையும் எமது இரா­ணுவ வீரர்­க­ளையும் மறந்து செயற்­படக் கூடாது. எமது நாட்டில் காணப்­பட்ட முப்­பது வருட கால கொடி­ய யுத்தத்தை பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு உயிர் தியா­கங்­களின் மத்­தியில் எமது இரா­ணு­வத்­தினர் வென்­றெ­டுத்­தனர். அதனை ஒரு போதும் மறந்து எந்த ஒரு அரசும் செயற்­படக் கூடாது.

மறு­புறம் இன்று எமது நாட்டில் சுதந்­தி­ர­மா­ன­தொரு நிலையில் தேசிய பாது­காப்பு உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த வகையில் புலம்­பெயர் தமி­ழர்கள் உட்­பட வெளி­நா­டு­களில் வாழும் டயஸ்போரா என்ற பதங்­க ளில் அடங்கும் தரப்­பி­னர்­களின் செயற்­பா­டுகள் கார­ண­மாக எமது நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல்கள் ஏற்­பட வாய் ப்­புக்கள் இருக்க கூடாது. இந்த விட­யங்­க ளில் அர­சா­னது மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும்.

கடந்த ஜனா­தி­பதி தேர்தலில் மைத்­திரிபால சிறி­சே­ன­வுக்கு தமிழ் மக்கள் வாக்­கினை செலுத்­தி­னார்கள் என்ற ஒரே கார­ணத்­ திற்­காக வடக்கு, கிழக்கில் மீண்டும் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் தலை தூக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. இவை தொடர்­பிலும் அரசு அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண் டும்.

விடு­தலைப் புலி­களின் செயற்­பா­டுகள் எமது நாட்டில் முற்று முழு­வ­து­மாக ஒழிக்­கப்­பட்­டாலும் ஏனைய உலக நாடு­களில் விடு­தலைப் புலி­களின் ஆத­ரவாளர்­களின் செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளன. ருத்­தி­ர­கு­மாரன் போன்ற சில தரப்­பினர் இன்னும் செயற்­ப­டு­வ­தோடு இயக்­கங்­க­ளுக்கு தேவை­யான பணமும் சேக­ரிக்­கப்­ப­டு­கி­றது.
இவ்­வா­றான நிலையில் எமது நாட் டின் தேசிய பாது­கா ப்பு தொடர்பில் எல்லா சந்­தர்ப்­பங்­க­ளி லும் அர­சா­னது எச்­ச­ரி­க்­கை­யுடன் செயற்­பட வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் செயற்­பா­டுகள்

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் செயற்­பா­டு­க­ளா­னது எமது பௌத்த மக்­க­ளுக்கு எதி­ரா­ன­தா­கவே எல்லா சந்­தர்ப்­பங்­களிலும் காணப்­ப­டு­கி­றது. அண்­மையில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் எமது நாடு யாரு­டை­யது என்று எனக்கு தெரி­யாது என்ற கருத்­தொன்றை அவர் தெரி­வித்­தி­ருந்தார்.
உண்­மையில் அவ­ரு­டைய நாடு எது அவரின் பூர்­வீகம் என்ன என்­பது குறித்தும் அவ­ருக்கு தெரி­யாது. கள்ளத் தோணி­யொன் றில் இலங்­கைக்கு வந்த பூர்­வீ­கத்தை சேர்ந்­தவர் என்றே அவரை குறிப்­பிட வேண்டும். இந்த கால­கட்­டங்­களில் அவரின் ஆலோ­ச­னை­களோ, செயற்­ப­ாடு­களோ எமது நாட்­டுக்கு தேவைப்­ப­டாது என்­ப­தனை அவர் புரிந்­துக்­கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு

வடக்­கு, கி­ழக்கு பகு­தியில் இன்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இரா­ணு­வத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் விமர்­ச­னங்­களை முன்­வைப்­பதும் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல்­களை ஏற்­ப­டுத்தும் வகையில் இரா­ணுவ முகாம்கள், விகா­ரை­களை அகற்றும் வகையில் போராட்­டங்­களை மேற்­கொள்­வ­தி­லேயே மும்­மு­ர­மாக செயற்­ப­டு­கின்­றனர்.

இவ்­வா­றான செயற்­பா­டு­களை நாம் தென்­னி­லங்­கையில் முன்­னெ­டுத்தால் என்ன நட க்கும் என்­பதை தமிழ் தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத் தல் ஏற்­படும் வகையில் இவர்­களின் செயற்­பா­டுகள் அமையக் கூடாது என்றார்
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடும் அரசாங்கம் Reviewed by Author on June 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.