சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளேன் : சங்கா
சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே குமார் சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன். இந்திய அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியுடன் நான் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளேன் : சங்கா
Reviewed by Author
on
June 28, 2015
Rating:

No comments:
Post a Comment