அண்மைய செய்திகள்

recent
-

வளர்ப்பு மகளை தந்தை திருமணம் செய்யலாம்: ஈரானில் புதிய சட்டம்


தத்து எடுத்து வளர்த்த மகளை தந்தை திருமணம் செய்யலாம் என ஈரானில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈரானில் குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களை பாதுகாப்பதற்காக புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் தத்தெடுத்து வளர்க்கும் மகளை வளர்ப்பு தந்தையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பிரிவும் உள்ளது. ஆனால் அந்த பெண் அவரை விட 13 வயது குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆதரவாக எம்.பி.க்கள் வாக்களித்தனர். எனவே அந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும் ஈரானில் பாதுகாவலர் கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கவுன்சிலில் மத குருக்கள் நீதிபதிகள் உள்ளனர். அவர்கள் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பார்கள். ஈரானில் கடந்த 2010–ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 42 ஆயிரம் குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வளர்ப்பு மகளை தந்தை திருமணம் செய்யலாம்: ஈரானில் புதிய சட்டம் Reviewed by Author on June 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.