யாழினில் படைமுகாம்கள் மூடப்பட்டதா? மைத்திரி அரசின் பொய்முகம் கிழிந்தது!!
யாழ்ப்பாணத்தினில் படைக்குறைப்பு மற்றும் பொதுமக்களது காணிகள் விடுவிப்பென புதிய மைத்திரி அரசு மேற்கொண்டுவந்திருந்த பொயப்பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது.இலங்கை இராணுவ தலைமைகமே இதனை போட்டுடைத்துள்ளது.
தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் கிடையாது எனத் தெரிவித்துள்ள இராணுவத் தலைமையகம்,யாழ்ப்பாணத்தில் இருந்த புறக்காவல் நிலைகள் மட்டும் மூடப்பட்டன என்று தெரிவித்துள்ளது.
புதிய அரசு அமைந்த பின்னர் வடக்கில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த தரப்பினர் சிங்கள் மக்கள் மத்தியில் பரப்புரை செய்து வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்கு இராணுவத் தலைமையகம் பதிலளித்துள்ளது.
அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.அதன்பின்னர் ஒழுங்கான முறையில் பாதுகாப்பு நிலைமைகள் மீளாய்வு செய்யப்பட்டு படை நிலைகள் மாற்றியமைக்கப்பட்டன.என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையினில் தென்னிலங்கையினிலிருந்து கொண்டுவரப்பட்ட பத்திரிகையாளர்களை சந்தித்த யாழ்.மாவட்ட இராணுவ தளபதி 59 படைமுகாம்கள் மூடப்பட்டுவிட்டதாகவும் மக்களது பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழினில் படைமுகாம்கள் மூடப்பட்டதா? மைத்திரி அரசின் பொய்முகம் கிழிந்தது!!
Reviewed by NEWMANNAR
on
June 19, 2015
Rating:

No comments:
Post a Comment