அண்மைய செய்திகள்

recent
-

வித்தியாவை கொலை செய்து தமிழ் மக்களுக்கு இப்படியான வரலாற்றுக்கறைகளை எழுதிய கூட்டத்தினர் உலகில் எங்குமே வாழ அனுமதியற்றவர்கள்-வினோ எம்.பி.

புதிய அரசாங்கத்தினூடாக சில அனுகூலங்களை நாம் பெற்றுக்கொண்டிருந்தாலும் அரசின் மீதான எமது நம்பிக்கையீனங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதனால் நாம் எமது பலத்தை இழந்து விடாது ஒற்றுமையாக செயற்பட்டு சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன் குளம் பிரதேச செயலகப் பிரிவில் அரசின் 100 நாள் வேலைத்திட்ட பணிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

எமக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை.பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் தீர்வுக்கான போராட்டக் கலத்தில் சக்திமிக்க இயக்கமாக இன்னமும் பலப்படுத்த நாம் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் எம்மை எல்லாம் ஒற்றுமைப்படுத்தியிருக்கிறது.

அந்த காமுகர்களுக்கும்,கொலைகாரர்களுக்கும் அதி உச்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க நாம் ஒன்று பட்டு நிற்பது போல்,கடந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாம் ஒன்று பட்டு நின்றது போல் எமது உரிமைகளை மீட்டெடுக்கவும், இனத்திற்கு விடுதலையைபெற்றுக் கொடுக்கவும் நாம் மேலும் மேலும் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.

 எமது ஒற்றுமை சிதறுமாக இருந்தால் நாம் எந்த இலக்கினையும் எட்டிவிடமுடியாது.

புனிதமான விடுதலைப்பயணத்திலே பங்கெடுத்த ,உதவிய எமது இளைஞர்கள் சிறைச்சாலையில் நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

 அந்த இளைஞர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடாத்திய எமது இனமே இன்று இன்னுமொரு இளைஞர் குழுவை தூக்கிலிட்டு உச்ச தண்டனை வழங்கு என கோருகின்ற நிலையை இன்றய சூழல் உருவாக்கியிருக்கிறது.

 தமிழ் மக்களுக்கு இப்படியான வரலாற்றுக்கறைகளை எழுதிய கூட்டத்தினர் எம் மண்ணிலோ, உலகின் எங்குமே வாழ அனுமதியில்லாதவர்கள்.அனுமதிக்கப்பட முடியாதவர்கள் எனவும் பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

வித்தியாவை கொலை செய்து தமிழ் மக்களுக்கு இப்படியான வரலாற்றுக்கறைகளை எழுதிய கூட்டத்தினர் உலகில் எங்குமே வாழ அனுமதியற்றவர்கள்-வினோ எம்.பி. Reviewed by NEWMANNAR on June 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.