அண்மைய செய்திகள்

recent
-

சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்.-Photos

தென்னிலங்கையில் நாங்கள் ஒன்றை சொல்லியிருக்கின்றோம் தமிழ் பேசும் மக்கள் நினைத்தால் ஜனாதிபதி என்ன அரசாங்கத்தையே மாற்றுகின்ற சக்தி எங்களிடம் இருக்கின்றது என்பதனை தெரியப்படுத்தியுள்ளோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் நானாட்டான் பஸார் பகுதியில் நேற்று புதன் கிழமை(29) மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,

வாக்குறிமை என்பது ஒரு பெறுமதியான சக்தி.இந்த வாக்குறிமை என்ற ஆயுதத்தை கையில் எடுத்து தான் கொடுங்கோள் ஆட்சியாளன் மற்றும் கொடுங்கோள் அரசை வீழ்த்தியுள்ளோம்.

தென்னிலங்கையில் நாங்கள் ஒன்றை சொல்லியிருக்கின்றோம் எமது தமிழ் பேசும் மக்கள் நினைத்தால் ஜனாதிபதி என்ன அரசாங்கத்தையே மாற்றுகின்ற சக்தி எங்களிடம் இருக்கின்றது என்பதனை.

எனவே அந்த சக்தியும்,பலமும் இப்போது எங்களுக்கு தேவை. யாருமே ஆட்சியை நடத்த முடியாது என் என்றால் அவர்களுக்கு 3 இல் 2 பெறும்பான்மை கிடைக்காது.

கொடுங்கோள் ஆட்சியை மாற்றியமைக்கின்ற பலம் எங்களிடம் இருக்கின்ற அதே வேளை தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குறிமையை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வழங்குகின்ற போது அடுத்த பலமும் நிருபிக்கப்படும்.

தென்னிலங்கையிலே அரசு அமைக்கின்றதாக இருந்தால் அது தமிழர்களினால் தான் முடியும் என்பதனை நிருபிக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.

ஆட்சியை மாற்றுகின்ற பலம் கொண்டவர்கள் தென்னிலங்கையிலே ஒரு அரசாங்கத்தை அமைக்கின்ற பலமும்,வள்ளமையும் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை நாங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும்.

அதற்காகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு 20 ஆசனங்களை எதிர்பார்க்கின்றது.விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கிய பின்பு அவர்கள் தேர்தல் பரப்புரைக்கு இப்பிரதேசம் உற்பட எல்லா இடத்திற்கும் வந்தார்கள்.

அப்போது 23 ஆசனங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெற வேண்டும்.ஆனால் 22 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றது.ஒரு ஆசனத்தை யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் கைப்பற்றினார்.இப்போது இந்த ஆட்சியை நிர்னயம் செய்கின்ற சக்தியாக வருகின்ற போது தான் மஹிந்த ராஜபக்ஸவினால் ஆட்சி அமைக்கக்கூடிய அரியனையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒரு போதும் வழங்காது.ஆகவே அதற்கு பலம் வேண்டும்.

நாங்கள் முன்வைக்கின்ற தீர்மானம் நிபந்தனையோடு ஆட்சியை நடத்த அதனை ஏற்றுக்கொள்ள தென்னிலங்கையிலே இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சிக்கு நிபந்தனையோடு ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.

அவ்வாறு நாங்கள் நிபந்தனைகளோடு ஒரு வருட கால எல்லையில் எங்களுடைய இனப்பிரச்சினை தீர்வதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்போடு இந்த அரசு பேச வேண்டும் என்ற நிபந்தனைகளும் வைக்கப்படும்.

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளாக வைத்துள்ள எங்களுடைய உறவுகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சொல்லுகின்ற நிபந்தனை வைக்கப்படும்.

உணவு கொடுத்தவர்கள்,பாதை காட்டியவர்கள்,தண்ணீர் கொடுத்தவர்கள் என பலர் 25 வருடங்களாக சிறைகளில் வாடுகின்றனர்.

ஆனால் தளபதியாக இருந்தவர் அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்.இன்று அவருக்கான எல்லா வழங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.






சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்.-Photos Reviewed by NEWMANNAR on July 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.