அண்மைய செய்திகள்

recent
-

2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான உரிமம்: இன்று வாக்கெடுப்பு...


எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்போகும் நாடுகளின் இறுதிப் பட்டியலில் சீனாவும் கஜகஸ்தானும் போட்டியிட்டு வருகின்றன. 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது தொடர்பில் பல்வேறு நாடுகள் போட்டியிட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது பீஜpங்கில் நடத்துவதற்கு சீனாவும், அல்மாட்டியில் நடத்துதற்கு கஜகஸ்தானும் கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழு இன்று வெள்ளிக்கிழமை இதற்கான வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்காக சீனா மற்றும் கஜகஸ்தான் நாட்டின் உயர்நிலை பிரதிநிதித்துவக் குழுக்கள் மலே'pயாவைச் சென்றடைந்துள்ளன.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு சீனா அல்லது கஜகஸ்தானில் நடத்தப்படும் பட்சத்தில் இது ஆசிய கண்டத்தில் நடத்தப்படும் இரண்டாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடராக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான உரிமம்: இன்று வாக்கெடுப்பு... Reviewed by Author on July 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.