செல்வம்,வினோ ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் ஆத்திக்குழி திறந்த வெளி அரங்கில் விசேட கூட்டம்.-Photos
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்,வேட்பாளர்களுமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரை ஆதரித்து விவசாய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டம் நேற்று(27) ஞாயிற்றுக்கிழமை மாலை முருங்கன் ஆத்திக்குழி திறந்த வெளி அரங்கில் இடம் பெற்றது.
இதன் போது அங்கு சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்,வேட்பாளர்களுமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோருக்கு அங்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உரை நிகழ்த்தினர்.
இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செல்வம்,வினோ ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் ஆத்திக்குழி திறந்த வெளி அரங்கில் விசேட கூட்டம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 27, 2015
Rating:
No comments:
Post a Comment