மன்னாரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இடம் பெற்ற ஐ.தே.க.தேர்தல் பிரச்சாரக்கூட்டம்-Photos
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று (31) வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்ற குறித்த பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.
அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பாக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் உற்பட வேட்பாளர்களான ஜேசுநேசன் மார்க்,எம்.எஹியான் ஆகியோரது உரையும் இடம் பெற்றது.
இதன் போது மீள் குடியேற்ற அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள்,உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னாரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இடம் பெற்ற ஐ.தே.க.தேர்தல் பிரச்சாரக்கூட்டம்-Photos
Reviewed by NEWMANNAR
on
July 31, 2015
Rating:
No comments:
Post a Comment