யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் உட்பட நால்வர் கைது
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் ஒருவர் உட்பட நான்கு பேர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி நகரில் இன்று காலை பிரசார பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், தேர்தல் சட்டவிதி மீறலுக்காக கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பின்னர் பிழையான தகவல் தமக்கு கிடைக்கப்பெற்றதாக கூறி சிலர் விடுவிக்கப்பட்டுள்ள போதும் வேட்பாளர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் உட்பட நால்வர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 31, 2015
Rating:

No comments:
Post a Comment