மன்னாரில் மது ஒழிப்பு பிரச்சார நடவடிக்கையாக விழிர்ப்புணர்வு பிரச்சார வீதி நாடகம்.-PHOTOS
மது ஒழிப்பு மாதம் கடந்த யூன் மாதம் 9 ஆம் திகதி முதல் யூலை மாதம் 08 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனுஸ்ரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(13) திங்கட்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தினால் மது ஒழிப்பு தொடர்பான விழிர்ப்புணர்வு வீதி நாடகத்தை அரங்கேற்றினர்.
மது ஒழிப்பு பிரச்சார நடவடிக்கையாக குறித்த வழிர்ப்புணர்வு வீதி நாடகம் இன்று(13) திங்கட்கிழமை காலை மன்னார் பிரதேசச் செயலக வளாகத்திலும்,மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திலும் இடம் பெற்றது.
மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த கலைஞர்கள் குறித்த நாடகத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமையில் குறித்த விழிர்ப்புணர்வு வீதி நாடகம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மது ஒழிப்பு பிரச்சார நடவடிக்கையாக விழிர்ப்புணர்வு பிரச்சார வீதி நாடகம்.-PHOTOS
Reviewed by NEWMANNAR
on
July 13, 2015
Rating:
No comments:
Post a Comment