வேட்பு மனு தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவு
வரும் பொதுத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது, இதன்படி கடந்த வௌ்ளிக்கிழமை வரை அங்கீகரிக்கப்பட்ட 47 கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இன்று காலை 08.30 முதல் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 47 கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. 111 சுயாதீனக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனு தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவு
Reviewed by NEWMANNAR
on
July 13, 2015
Rating:

No comments:
Post a Comment