மூன்று புதிய இராஜதந்திரிகள் நியமனம்,,,

மூன்று புதிய இராஜதந்திரிகளை நியமித்துள்ளதாக வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர்கள் இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிசினி தெரிவித்தார்.
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் மேலதிக செயலாளரான எசல வீரகோன் இந்தியாவுக்கான இலங்கை தூதுவராகவும், டாக்டர் சமன் வீரசிங்க ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராகவும், அருந்தி ரணராஜா பிலிப்பீனுக்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்று புதிய இராஜதந்திரிகள் நியமனம்,,,
Reviewed by Author
on
July 30, 2015
Rating:

No comments:
Post a Comment