அண்மைய செய்திகள்

recent
-

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய ஆணையாளர்...


எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதியின் பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய ஆணையாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆணைக்குழுவால் இதுவரை எந்த விதமான பாரிய மோசடிகள் குறித்தும் உரிய விசாரணைகள் நடாத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இவ்வாணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்தார் எனத் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராகவும் இலஞ்ச குற்றச்சாட்டு எழுந்ததோடு அது சம்பந்தமாக ஆணைக்குழுவால் அவரிடம் விசாரணை செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
     
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய ஆணையாளர்... Reviewed by Author on July 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.