அண்மைய செய்திகள்

recent
-

காயத்திற்கு பிறகு களமிறங்கும் போல்ட்----


உலகின் அதி­வேக வீரர் உசேன் போல்ட். ஜமைக்­காவை சேர்ந்த இவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்­டத்தில் உலக சாத­னை­யாளர் ஆவார். 100 மீட்­டரில் 9.58 வினா­டியில் கடந்தும், 200 மீட்­டரில் 19.19 வினா­டியில் கடந்தும் சாதனை படைத்தார். காயத்தால் அவ­திப்­பட்ட அவர் அதற்­காக சிகிச்சை பெற்றார். அதன்பின் தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டார். தற்­போது காயத்தில் இருந்து மீண்­டுள்ள அவர் நீண்ட காலத்­துக்கு பிறகு களம் இறங்­கு­கிறார்.

லண்­டனில் ஒலிம்பிக் மைதா­னத்தில் தட­கள போட்டி தொடங்­கு­கி­றது. இதில் உசேன் போல்ட் களம் இறங்­கு­கிறார். அதி­வேக 100 மீட்டர் ஓட்ட பந்­த­யத்தில் தகுதி சுற்று மற்றும் இறு­திப்­போட்டி நடக்­கி­றது.

காயம் குணம் அடைந்து மீண்டும் பிர­வேசம் அடைந்­துள்ள உசேன் போல்ட் மீது அனை­வரின் பார்­வையும் விழுந்து உள்­ளது. அவ­ரது ஓட்­டத்தை காண ஆர்­வ­முடன் உள்­ளனர். இது­கு­றித்து உசேன் போல்ட் கூறு­கையில், நான் கடு­மை­யான பயிற்சி மேற்­கொண்டு இருக்­கிறேன். அதன் பயன் எப்­படி இருக்கும் என்று நாம் பார்ப்போம்.

இங்கே நான் தோற்­க­மாட்டேன். எப்­போதும் நான் போட்­டிக்கு தயா­ரா­கவே இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
காயத்திற்கு பிறகு களமிறங்கும் போல்ட்---- Reviewed by Author on July 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.